மழையும் மேகமும் தனித்தனியாயிருப்பினும் ஒன்றுக்கொன்று சாராதனவல்ல காற்றும் இலைகளும் தனித்தனியாயினும் காற்று விளை அசைவிலேயே இலைகள் பொருள் கொள்கின்றன அகமும் புறமும் தனித்தனியேயாயினும் ஒன்றுக்கொன்று சாராதிருப்பதில்லை தெரிந்ததும், தெரிந்தே தெரியாதனவும் தனியாயிருப்பினும் இரண்டும் இணைந்தே பொருள் பெறுகின்றன சாராதிருத்தல் பற்றிப் பேசும்போதெல்லாம் சார்ந்திருத்தலை முழுதாய் அறிந்தே இருக்கிறோம் இருப்பினும் அத்தனை எண்ண ஓட்டம் மொத்தமும் ஒன்றுக்கொன்று சாராதிருப்பதாகவே படுகிறது
எதாவது எழுதிப்புடணும்ன்னு தேடித் தேடிப் பாத்து முடிச்சா பாடுபொருள் பஞ்சம் மட்டும் தான் மிச்சம் நிக்கிது பாட்டு ஒண்ணும் புதுசாப் பொறந்துடல்லே காணாத கனவும், நீண்டு நெளிஞ்ச நெழலுமாயும், இல்லாத இருப்பையும் பத்தி எழுதி எழுதி பேனா மொனை தேஞ்சது தான் மிச்சம் கட்டுக் கட்டாய் கறுப்பு மசி படிஞ்ச காயிதக் கட்டு குளிர் காய எரிக்க மட்டுமே பிரயோசனம் புதுசா எதாவது எழுதிப்புடணும்ன்னு நெனச்சு பேப்பரும் பேனாவுமாய் உக்காரும்போதெல்லாம் வந்து பொறந்திடும் ஒரே மாதிரி, அதே மாதிரி, சுமாரான, நாசமாப்போன நாலு வரி.
சற்றுத் தொலைவில் தெரியும் கரை நீச்சலுக்கு உறு துணையாய் அலைகள் ஒளியால் கை காட்டி திசை உணர்த்தும் கலங்கரை விளக்கம் மனமெல்லாம் மகிழ்வு வானெல்லாம் விண்மீன்கள் வேறென்ன வேண்டும் கரை சேருதற்கு? இத்தனை இருக்க கரை சேருதல் அன்றி வேறொரு வழியும் உண்டோ?