புதன், செப்டம்பர் 15, 2010

சாராதிருத்தல்

மழையும் மேகமும் தனித்தனியாயிருப்பினும்
ஒன்றுக்கொன்று சாராதனவல்ல
காற்றும் இலைகளும் தனித்தனியாயினும்
காற்று விளை அசைவிலேயே இலைகள் பொருள் கொள்கின்றன
அகமும் புறமும் தனித்தனியேயாயினும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதில்லை
தெரிந்ததும், தெரிந்தே தெரியாதனவும் தனியாயிருப்பினும்
இரண்டும் இணைந்தே பொருள் பெறுகின்றன
சாராதிருத்தல் பற்றிப் பேசும்போதெல்லாம்
சார்ந்திருத்தலை முழுதாய் அறிந்தே இருக்கிறோம்
இருப்பினும் அத்தனை எண்ண ஓட்டம் மொத்தமும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதாகவே படுகிறது

கருத்துகள் இல்லை: