செவ்வாய், செப்டம்பர் 30, 2008

எனது

இத்தனை நாட்களாய் தணியாத குழப்பம்

எனது எது, எனதல்லது எது

நில்லாது தேடித் திரிகிறேன்



எனது எதுவென்று புரிவதற்குள்

அது எனதல்லதாகி விடுகிறது

நான் எனதானவனா?

என் வாழ்க்கை எனதானதா?

நான் வாழ்ந்து கழித்திருக்கும் இத்தனை நாட்களும்

எனதானவையா?



இத்தனை குழப்பங்களும் இப்படியே இருக்க,

எனது முடிவு மட்டும் எனதாயிருக்குமோ?

அதன் பின்னே எனக்கு அது

புரிந்ததாய் இருக்குமோ?



இத்தனை காலம் வாழ்ந்து முடித்தும்

தணியவே தணியாத இந்தக் குழப்பம்...

கருத்துகள் இல்லை: