வெள்ளி, செப்டம்பர் 05, 2008

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

சாத்தானின் இரட்டைக் கொம்புகளில்
சத்தமின்றி சந்தம் பயின்று

ஆய்த எழுத்தில்
தலை கீழாய் கருத்தொருமித்த
ஏராளக் கணங்களில்

உயர் மெய், உயிர் மெய்யில்
நினைவு நிறுத்தி
துணை எழுத்தாய் மெய் எழுத்து தேடி

அங்கும் இங்கும் பார்த்து நிற்கையிலே
மாறுகிறேன் நான்

ஒரு
ஒற்றைக்கொம்பு
காண்டாமிருகமாய்...

கருத்துகள் இல்லை: