சனி, பிப்ரவரி 21, 2009

பூனைகள்

பொதுவாகவே எனக்கு எப்போதுமே பூனைகளை பிடித்ததில்லை
நான் படித்துப்பார்க்கும் எல்லோருக்கும் 
நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் போதலேருக்கும் 
முராகாமிக்கும் பாரதியாருக்கும் 
எல்லோருக்கும் பூனைகளைப் பிடித்திருக்கிறது 
எனக்கோ அவ்வளவாக பூனைகளைப் பிடிப்பதில்லை 
இத்தனையும் படிக்கையிலே 
எனக்கும் பூனைகளை 
பிடித்துப் போய் விடவேண்டும் போலவே இருக்கிறது ஆயினும் 
என்னால் எனக்கு பூனைகளை பிடிக்க வைக்க
முடியவில்லை

கருத்துகள் இல்லை: